கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம் 0
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே, இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார். இவர் சுவிஸர்லாந்தில் குடியுரிமை பெற்றவராவார்.