வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் 0
– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில்