தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல் 0
– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே, இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து, ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.