இந்தியா பயணமானார் மைத்திரி 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தியா பயணமானார். பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இம்மாநாடு இன்றும் நாளையும் இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது.