“கடந்த அரசாங்கங்களை விடவும், எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது”: அமைச்சர் உதய கம்மன்பில 0
ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சி காலத்தை காட்டிலும் முறையற்ற வகையில் தமது அரசாங்கம் செயற்படுவதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே மக்களிடம் அனைத்தையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் கூறியுள்ளார். ‘மக்கள் பேரவை’