அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி