கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன் 0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.