ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல் 0
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்க நியோமலி ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மேற்படி இருவரும், அங்கு தமது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.