‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை 0
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ செயற்பாட்டின் போது, ஏதேனும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் நிவாரண நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை