Back to homepage

Tag "துப்பாக்கிச் சூடு"

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது 0

🕔20.Feb 2024

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார்

மேலும்...
திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்

திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம் 0

🕔12.Feb 2024

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் இன்று (12) அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் – கடையில் காசாளராகப் பணிபுரியும் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய

மேலும்...
பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர் 0

🕔5.Feb 2024

‘அபே ஜன பல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட 05 பேர் பெலியத்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் – சந்தேகநபர் நேற்று (04) ஹபராதுவவில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...
அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔22.Jan 2024

‘அபே ஜனபல கட்சி’ தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 05 பேர், இன்று (22) தங்காலை – பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபல பௌத்த பிக்குகளான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொடத்தே ஞானசார தேரர் ஆகியோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சமன் பெரேராவின் ‘அபே ஜனபல

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jan 2024

லொறி சாரதி மீது நேற்று (18) நாரம்மலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாரம்மல – தம்பலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, ஒருவர்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது 0

🕔19.Jan 2024

பாதுகாப்பு சோதனைக்காக வாகனத்தை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிரியுல்ல நாரம்மல வீதியில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும், சாரதி உத்தரவை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன்போது வாகனத்தின் மீது

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔6.Dec 2023

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றி வந்த நிலையில், இவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும், இது தொடர்வில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட நிலையத்திற்கு வந்திருந்த போது துப்பாக்கிச்

மேலும்...
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0

🕔15.Nov 2023

லுனுகம்வெஹர தேசிய பூங்காவில் இன்று (15) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும்...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர் 0

🕔26.Oct 2023

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல்தாரியான ரொபர்ட் கார்ட் “ஆயுததாரியாகவும்,

மேலும்...
பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔12.Oct 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்

மேலும்...
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில்  வைத்து விசாரிக்க உத்தரவு

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு 0

🕔26.Sep 2023

அவிசாவளை – தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட – துபாயில்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு

துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு 0

🕔17.Sep 2023

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருதானை – மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது

மேலும்...
நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு 0

🕔28.Aug 2023

மாத்தறை மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தை இன்று (28) காலை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த பந்துல புஷ்பகுமார (வயது 55) நேற்றிரவு மாத்தறை கடற்கரை வீதியிலுள்ள மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் கடமையாற்றியிருந்த நிலையில், இன்று காலை கடமையில்

மேலும்...
முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔28.Aug 2023

துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இருவர் – கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக

மேலும்...
தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு

தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு 0

🕔27.Aug 2023

பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எனக் கூறி, இலங்கையின் இரண்டு பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகள் தனது உருவத்தைக் காட்டியதாக கேகாலையைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனக புஷ்பகுமார என்ற நபர், இவ்விவகாரம் குறித்து இரண்டு தொலை்காட்சி அலைவரிசைகளுக்கும் அறிவித்ததாகவும், ஆனால் சனிக்கிழமை (26) மாலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்