ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் 0
– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்