ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; ஆஜராகாத 52 உறுப்பினர்கள் 0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்துக்கு சமூகமளிக்காத