முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 0
முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளின் போது, அவர்களின் அதிகமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகவும், முஸ்லிம்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டமைக்கு எந்தவொரு நஷ்டயீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது எனவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம். நசீர் தெரிவித்தார். நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்