காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

🕔 April 6, 2016

Surrender - 0111– க. கிஷாந்தன் –

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சரணடைந்தார்.

பாடசாலை சென்று, குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ந் திகதி முறைப்பாடு செய்தனர்.

இம் முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவி, தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

மேற்படி இருவரும் இள வயதுடையவர்கள் என்பதால், அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்