ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு
பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளார்.
ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனாதிபதி அதன் ஆயுட்காலத்தை இவ்வாறு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.