ஐஸ் ‘அடித்த’ பொலிஸ் கொன்ஸ்டபில் அகப்பட்டார்

🕔 January 2, 2023

வீடொன்றினுள ஐஸ் போதைப்பொருள் பாவித்ததாக கூறப்படும் பயிலுனர் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள், இவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மேற்படி நபர், மொரட்டுவை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் எனவும், அவர் கடந்த டிசம்பர் 12ஆம் திகதி முதல் விடுமுறையில் இருந்ததாகவும், மீண்டும் பணிக்கு சமுகமளிக்கவில்லை எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்