அடுத்த வருடம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு: நாடாளுமன்றில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

🕔 December 6, 2022

த்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் தொடககம் நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரையான மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.

“ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளது. இலங்கை மின்சார சபையின் செலவினங்களைச் சமாளிக்க 420 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

இலங்கை மின்சார சபை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 70 பில்லியன் ரூபாவும், சிறிய அளவிலான மின்சார விநியோகஸ்தர்களுக்கு 40 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்