எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி வழங்கிய கடன் தொடர்பில் லிற்ரோ நிறுவனம் தகவல்

🕔 September 30, 2022

ரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக, உலக வங்கியிடமிருந்து கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த முழு கடன் தொகையும் – எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று, லிற்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர்களை மீண்டும் திறைசேரிக்கு செலுத்த ஆரம்பித்துள்ளோம்.

ஜூலை மாதம் உலக வங்கியிடம் இருந்து உதவித் தொகையை நாம் பெற்றோம். அந்த உதவித் தொகையில் முதல் கட்டத்தைப் பெற்று தற்போது மத்திய கட்டத்தில் இருக்கிறோம். மீதமுள்ளவை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

உலக வங்கியின் மீதமுள்ள 70 மில்லியன் டொலர்களை தற்போது வருகின்ற கப்பலுக்கு செலுத்தி வருகின்றோம். செப்டம்பர் மாதத்தில் 6.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு செலுத்தியது போல், ஒக்டோபர் மாதத்திலும் மேலும் 8 பில்லியன் ரூபா தொகையை திறைசேரிக்கு செலுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அதன்படி, டிசம்பர் மாதத்துடன் உள்ளடக்கிய 26 பில்லியன் ரூபா முழுத் தொகையை மொத்தமாக – லிட்ரோ எரிவாயு நிறுவனம் செலுத்துவதற்கான திட்டங்களை தயாரித்துள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்