இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்? எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம்

🕔 January 31, 2022

ஏ.ஆர்.ஏ. பரீல்

ஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன என்று, கல்வி வெளி­யீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரும தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தற்­கொலைத் தாக்­குதல் தொடர்­பாக ஆராய்ந்து வாக்கு மூலங்கள் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரைக்­க­மை­யவே இந்த நடவடிக்கைகள் மேற்­கொள்­ளப்­படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளதால் அப்­பா­ட­நூல்­களை மாண­வர்­க­ளுக்கு விநியோகிப்பதை உட­ன­டி­யாக நிறுத்­தும்­ப­டியும், அப்­பா­ட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருப்பின் உட­ன­டி­யாக அவற்றை மீளப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அண்­மையில் கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள ஆணை­யாளர் நாயகம் – அனைத்து தேசிய பாட­சாலை அதி­பர்கள் மற்‌றும் பாடநூல் நேர­டி­யாக விநியோகிக்கப்படும் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு சுற்று நிரு­ப­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்;

“பாட­நூல்கள் ­தி­ருப்­பிப்­பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் மூலம் மாணவர்களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்படாது. ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு புதிய பாட­நூல்கள் மாணவர்களுக்கு வழங்­கப்­படும்.

கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வொன்றின் பரிந்துரைகளுக்கு அமைய, கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான முஸ்லிம் அதி­கா­ரி­களின் சிபா­ரி­சு­களின் படி, இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது” என்றார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கல்வி வெளி­யீட்­டுத்­தி­ணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான ஐ.ஏ.எம்.அப்­சான் குறிப்பிடுகையில்;

“இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் அடங்­கி­யுள்ள சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களே திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பாடநூல்களில் அடங்­கி­யுள்ள சில வச­னங்கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. சில வச­னங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன. இத் திருத்­தங்கள் இஸ்லாம் பாடத்­திட்டம் மற்றும் மார்க்­கத்­துக்குப் பாதிப்­பில்­லாத வகை­யிலே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அச்­ச­கத்தில் ஒரு தொகை பாட நூல்கள் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. அந்தப் பாட­நூல்­களில் திருத்­தங்­களில் ஸ்டிக்கர் ஒட்­டப்­படும். ஏற்­க­னவே மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள பாட­நூல்கள் மீளப்­பெற்று களஞ்­சி­யத்­துக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்றன. அந்­நூல்கள் மீண்டும் திருத்­தங்­க­ளுடன் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட மாட்­டாது.

விஷேட உத்­த­ர­வு­க­ளின்­ப­டியே இந்­ந­ட­வ­டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மாண­வர்­களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் இத்திட்டத்தை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

10ஆம், 11ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் சமய பாடநூல்களிலே பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை 06ஆம், 07ஆம் தரங்களுக்குரிய பாடநூல்களில் ஒரு சில திருத்தங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் அகற்றப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்