கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு

🕔 January 29, 2022

– நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் –

கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஓர் அங்கமாக, கொரோனாவை கடடுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள், இன்று (29) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் நடைறெ்ற இந்நிகழ்வில் கொரோணா தொற்றில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அறிமுக உரையை வெளிநோயாளர் பொறுப்பு வைத்திய அதிகாரி சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் நிகழ்த்தியதுடன், தொற்றுத்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டொக்டர் ஏ.எல். பாரூக் கொரோணா கட்டுப்பாட்டு முகாமைத்துவ திட்ட அறிக்கை விளக்கத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த சுகாதார துறையினர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்