கட்டணம் செலுத்தத் தவறியோருக்கு சலுகை: மின்சார சபை அறிவிப்பு

🕔 January 3, 2022

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள பாவனைாயாளர்களுக்கு, புதிய சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பாவனையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக, மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நிலுவையில் உள்ள மின் பாவனைக்கான கட்டணங்களைச் செலுத்த முடியவில்லை என பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பாவனையாளர்கள் தங்களின் தற்போதைய மற்றும் நிலுவையில் உள்ள கட்டணத்தில் ஒரு பகுதியை ஒன்றாக செலுத்தினால், மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவித்துக் கொள்ள முடியும் என மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்