20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம்

🕔 December 16, 2021

– றிப்தி அலி –

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது,

பிர­த­மரின் இந்த விஜ­யத்தில் 20ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கிய முஸ்லிம் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கிய முஸ்லிம் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அரச தரப்பின் உயர் மட்டத்­தி­ன­ருக்கும் இடையில் முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்று அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை, அமெ­ரிக்க டொலர் நெருக்­கடி தொடர்பில் பேச்சு நடத்து­வ­தற்­காக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வலு­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில மற்றும் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் தனித்­தனி விஜயங்களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில், மத்­திய வங்­கியின் உயர் மட்டக் குழுவொன்று இந்த வாரம் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான பயணமொன்றை மேற்­கொண்­டுள்­ளது. கட்டார், ஐக்­கிய அரபு ராச்சியம் மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கே இந்த குழு விஜயம் செய்து முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்­ளது.

இக்­கு­ழுவின் சவூ­திக்­கான விஜ­யத்தில் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்­ராலும் இணையவுள்ளார். இந்த தூதுக்­கு­ழுவின் விஜ­யத்­தினை தொடர்ந்தே மத்­திய கிழக்குக்கான பிரதமரின் விஜயம் இடம்­பெறும் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது,

கடந்த மார்ச் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – பங்களாதேஷுக்கு மேற்கொண்ட விசேட விஜயத்தினை அடுத்து, 200 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுதியில் 4036 கோடி ரூபா) கடனை இலங்கைக்கு அந்நாடு வழங்கியமை குறிப்பிடத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்