கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு

🕔 December 7, 2021

– பாறுக் ஷிஹான் –

கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.எல். பண்டாரநாயக்க தனது கடமைகளை இன்று (7) பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் அவர் தனது கடமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷட அதிகாரியான இவர், இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்