07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார்

🕔 October 19, 2021

ங்க பிஸ்கட் தொகையொன்றை உடலில் மறைத்துக் கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) அதிகாலை 02 மணி அளவில் குறித்த நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர் விமான நிலையத்தில் பணி புரியும் 25 வயதுடைய இளைஞராவார்.

குறித்த நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 04 கிலோ 848 கிராம் எடையுடைய 48 தங்க பிஸ்கட் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் சந்தை மதிப்பு சுமார் 07 கோடி ரூபாய் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்