நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது
மட்டக்குளிய பிரதேசத்தில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் கேணல் தரத்தைக் கொண்ட மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட ராணுவ அதிகாரியை பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு, ராணுவ பொலிஸாரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்ததாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார்.
அதற்கிணங்க, சந்தேக நபரை நேற்று (29) பிற்பகல் பொலிஸாரிடம் ராணுவத்தினர் ஒப்படைத்த பின்னர் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.
மட்டக்குளியில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தரின் கணவர் (வயது 36) கொலை செய்யப்பட்டதை அடுத்து, போலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
குறித்த கொலையுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில், இறந்தவரின் மனைவி மற்றும் மட்டக்குளிய ராணுவ முகாமில் பணியாற்றும் 13 ராணுவத்தினரை போலிஸார் கைது செய்திருந்தனர்.