பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (24) வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர்.
இன்று காலை அங்கு சென்ற அவர், சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.