பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில்

🕔 June 29, 2021

சில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

“இது கட்சி சம்பந்தப்பட்ட விடயம் என்று கூறுகின்றீர்கள். ஆனால் தகவல்களுக்கு அமைவாக பசில் ராஜபக்ஷவிக்கு நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாடு சப்பந்தப்பட்ட முக்கிய விடயம் என்பதினால் இவ்வாறு நடைபெறவுள்ளதா அல்லது உங்களுக்கு தெரிவிக்கப்படவில்லையா” என எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

“பத்திரிகைகளில் குறிப்பிடப்படும் விடயங்களைக்கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமான விடயமல்ல. அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரமாகும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தால் அது குறித்து ஜனாதிபதி எமக்கு அறிவிப்பார்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்