ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு

🕔 February 28, 2021

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கான அதற்கான அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ‘த சன்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்பொருட்டு, ஆளும் கூட்டணியை உருவாக்கும் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை அவர் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துதவற்கு அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

தேர்தலுக்கு முன்னோடியாக, தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று உயர் மட்ட வட்டாரமொன்று தெரிவித்துள்ளது எனவும் சன்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு தேர்தல் சட்டம் திருத்தப்பட்டுள்ள போதும், இன்னும் அதற்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை.

அதனால் பழைய விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பலரும் விரும்புகின்றனர்.

ஆனால், நாடாளுமன்றில் அதற்கும் ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்