விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம்

🕔 November 23, 2020

பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று மாலை கூடிய நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களாக 14 பேரை நியமிப்பதற்கும் நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன கடமையாற்றி வருகின்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதலை தொடர்ந்து, அப்போது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

இதனையடுத்து, சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்