20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு

🕔 October 23, 2020

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குரிய இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு மற்றும் இறுதி வாக்கெடுப்புகளின் போது, எதிர்த்து வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், அந்தத் திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தார்.

இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்ட நபரொருவர் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கலாம் எனும், 20ஆவது திருத்தத்திலுள்ள சரத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அதற்கு தனியாக நேற்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது அதனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் வாக்களித்தார்.

அந்த வகையில் குறித்த சரத்து – 157 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக 64 வாக்குகள் கிடைத்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்