கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் முயற்சியைத் தொடர்வேன்: கருணா அம்மான்

🕔 August 27, 2020

– பாறுக் ஷிஹான் –

னது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாகவும் பொதுத் தேர்தலில்  போட்டியிட்ட  முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களை நேற்று புதன்கிழமை மாலை அம்பாறை மாவட்டத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எதிர்காலத்தில்   எனக்கு இருக்கின்றது. எனக்காக புலம்பெயர் வாழ் சொந்தங்கள் இளைஞர்கள் உழைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள். இதனை  மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு   பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச்சமூகம் குழிதோண்டிப் வைக்கப்படுவார்கள்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன்.

அத்துடன் எமது கட்சியின் கிளைகளை அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்காலத்தில் எமது மக்களுக்கு நல்ல செய்தி வரும்.

தற்போது வரை அதாவுல்லாஹ் எம்.பி.க்கு கூட அமைச்சு பதவி கொடுப்பதற்கு சிக்கல் உள்ளதை நீங்கள் அறிவீர்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்