க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

🕔 July 20, 2020

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறும்.

05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்க பாடசாலைகளுக்கான 02 ஆம் தவணை விடுமுறைக் காலம் – ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் நொவம்பர் 16 ஆம் திகதி வரை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்