வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

🕔 June 24, 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வில்பத்து காடழப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டின் கீழ், றிசாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் – இதனை அறிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்