பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

🕔 February 23, 2020

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மஹியங்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி கலைக்கப்படுவதோடு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 500 போடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 02 லட்சத்து 70 புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்