100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்
– க. கிஷாந்தன் –
தியகல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வேன் விவத்தில் அதில் பயணம் செய்த 05 பேர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு மேற்படி வேனில் பயணிகள் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பளை பகுதியை சேர்ந்தவர்களே விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.