தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

🕔 December 15, 2019

– முன்ஸிப் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், ‘ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்’ எனும் கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமை தாங்கவுள்ளார்.

அமெரிக்காவின் ‘சலிஸ்பரி’ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பேராசிரியர் கீத பொன்கலன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்