பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம்

🕔 November 27, 2019

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலக பணிகள் அனைத்தும் இன்று தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய, பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இன்று ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் பின்னர் பொலிஸ் பேச்சாளர் மற்றும் அவரது  அலுவலகம் முன்னெடுத்த  தகவல் வழங்கும் பணிகளை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டத்துக்ல்கு அமையவே  பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்