வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 November 5, 2019

னாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர், வேட்பு மனு கையளிக்கப்பட்ட பின்னர் மற்றுமொரு வேட்பாளருக்காக முன்னிலையாகின்றமை மற்றும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றமை நெறி முறைகளை மீறும் செயல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள நெறி முறைகள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு 75 வீதம் பூர்த்தி அடைந்துள்ளதாக, அஞ்சல்மா அதிபர் ரஞ்சனி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 09 ஆம் திகதி வரை இந்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்