பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

🕔 October 21, 2019

கிப்தின் லக்சார் நகருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது.

இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேற்படி பெட்டிகள் – ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள் கொண்டுள்ளன.

இது தற்காலத்தில் கண்டறியப்பட்ட மிகவும் முக்கியமான மற்றும் பெரிய கண்டுபிடிப்பு என அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் குறித்தும், அதன் மூலமாக மக்கள் குறித்தும் புரிந்து கொள்ள இவை உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்குள்ள சமாதிகள் பெரும்பாலும் கிமு 664-332 காலத்தில் வாழ்ந்த மன்னர்களுடன் தொடர்புடையவை ஆகும்.

ஒரு காலத்தில் தொழிற்சாலைகள் நிறைந்து இருந்த பகுதி ஒன்றினை லக்ஸார் மேற்கு சமவெளியில் கண்டறிந்துள்ளதாக கடந்த வாரம் தொல்பொருள் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

இந்த பகுதியில் சேமிப்புக்கான வீடு மற்றும் 18 ஆம் சாம்ராஜ்யத்தின் நாட்கள் குறிக்கப்பட்ட பானைகளும் இருந்ததாக அமைச்சு கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்