ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

🕔 October 13, 2019

– க. கிஷாந்தன்

னாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்கப் போவாதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், கட்சியின் தேசிய சபை கூடியது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே, அங்கு எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்