சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

🕔 October 12, 2019

டக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது.

அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனத் துருக்கி ஜனாதிபதி எர்துவான் கூறி உள்ளார்.

ஐ.எஸ். படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர்.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது.

ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியில் இருந்து தனது துருப்புகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது.

இதனை முதுகில் குத்தும் செயலாக, சிரிய ஜனநாயகப் படை கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்