அம்பாறை மாவட்டத்தில் புதிதாக ராணுவ சோதனை சாவடிகள்

🕔 October 1, 2019

பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் ராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கை ஒன்றினை நேற்று முன்னெடுத்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்த ராணுவத்தினர், சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதே போன்று ராணுவத்தினருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து, கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான ராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில்  தேடுதலில் ஈடுபட்டனர்.

 சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள்,  மையவாடியை அண்டிய பகுதிகளில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன்  குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியால் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் ராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்