கடற்படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் தளபதி மற்றும் விமானப்படையின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு பதவி உயர்வு

🕔 September 19, 2019

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஒப் த பீல்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் விமான படை தளபதி ரொஷான் குணதிலக்க, மார்ஷல் ஒப் த எயார்மார்ஷல்  ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு வளாகத்தில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பதவி பிரமாணங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 05 ஆம் திகதி வௌியிடப்பட்டிருந்தது.

தீவிரவாதத்தை ஒழித்தமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட மீது குற்றம்சாட்டப்பட்ட நிலைியல், அவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்