ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

🕔 September 16, 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார்.

அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளதாகவுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சை பராமரித்துச் செல்வதற்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டடம் ஒன்றை பெற்றுக் கொண்டது தொடர்பிலான முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்