73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

🕔 September 4, 2019

‘தொழில் முனைவோர் விழிப்புணர்வு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு, நிதியுதவிகளை வழங்கி வைத்தார்.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உட்டபட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்