தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க

🕔 August 18, 2019

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் மேலும் 28 அமைப்புகளை ஒற்றிணைத்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யினால் இந்த பேரணியும் பொதுக்கூட்டமும் காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய கூட்டத்தின் போது தமது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்தமைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் பெயரிடப்பட்டார்.

ஆயினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி தமது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்