அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

🕔 August 13, 2019

ம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார்.

இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நீண்­ட­காலம் இடம்­பெ­யர்ந்­தோ­ருக்­கான மீள்குடி­யேற்ற
செய­ல­ணியின் நிதி­யி­லி­ருந்தும் 06 மில்­லியன் ரூபாவை அமைச்சர் றிஷாத் பதி­யூதீன் நஷ்ட ஈடுகள் வழங்­கு­வ­தற்கு
ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

வன்­செ­யல்­க­ளினால் சேத­மாக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ
பள்­ளி­வா­ச­லுக்கு 26 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பாதிக்­கப்­பட்ட ஏனைய 13 சொத்­து­க­ளுக்கு 3.6 மில்­லியன் ரூபா மதிப்பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் கூறினார்.

பாதிக்­கப்­பட்ட ஏனைய 13 சொத்­துக்­க­ளுக்கு தற்போது
திறை­சே­ரி­யினால் வழங்­கப்­பட்­டுள்ள 10 மில்­லியன் ரூபா­வி­லி­ருந்து முதற்­கட்­ட­மாக தலா ஒரு லட்சம் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கண்டி – திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட
சொத்­து­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட்­டது போன்று, அம்­பாறை வன்செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்கும் கட்டம் கட்­ட­மா­கவே நஷ்டஈடுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அம்­பாறை நஷ்டஈடு­களை துரி­தப்­ப­டுத்­தும்­படி புனர்­வாழ்வு அமைச்சுக்குப் பொறுப்­பா­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க
உத்­த­ர­வினை பிறப்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்