முதலில் வேட்பாளரை அறிவியுங்கள், பிறகுதான் கூட்டணி: ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் தெரிவிப்பு

🕔 August 9, 2019

க்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், கூட்டணி அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ எனும் கூட்டணியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என நானும் பிரதமரும் இணங்கிக் கொண்டதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இப்படியான கூட்டணியை ஏற்படுத்த நான் 100 வீதமல்ல, லட்சம் வீதம் இணங்குவேன். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரும், கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் முக்கியமான கட்சிகளும் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமைய , ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி அமைக்கப்பட வேண்டும்.

நான் தனிப்பட்ட ரீதியில் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். அப்படி செய்தால் மாத்திரமே உத்தேச கூட்டணி அமையும் என்பது மட்டுமல்ல, மேலும் பல கட்சிகள் இணைவதோடு, நபர்களும் கூட்டணியில் இணைந்து கொள்வர்.

தற்போது நடக்க வேண்டியது பொய்யான செய்தியை ஊடகங்கள் வழியாக பரப்புவது அல்ல. முதலில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து, பகிரங்கப்படுத்தியதன் பின்னர் கூட்டணிக்கான உடன்படிக்கை உருவாக்க வேண்டும் என்றும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்