ஆசிய ஆணழகன் போட்டியில் வென்ற இளைஞருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு: ஆறுமுகன் வழங்கினார்

🕔 August 2, 2019

க. கிஷாந்தன்

சிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற மாதவன் ராஜ்குமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வழங்கினார்.

லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் மாதவன் ராஜ்குமாரை வரவேற்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில், இந்த பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இலங்கை – இந்திய சமுதாய பேரவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இணைந்து இந்த அன்பளிப்பினை வழங்கியுள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் டுபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள இவருக்கு விமான பயணசீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்