சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

🕔 July 29, 2019

ரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்தவர் மீண்டும் போட்டியிட கூடாது என்று  தனக்கும், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கூடாது என்று கோத்தபய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷவுக்கு ஆகியோருக்கும்,   ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதை 35 ஆக அதிகரித்தமை  நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷக்கும் எதிராக நிறைவேற்றப்பட்டதே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பின் 19 ஆவது  திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிக சூட்சமமான முறையில் குறைக்கப்பட்டுள்ளது.  இதுவே இன்றைய அரசியல் அதிகார பிரச்சினைக்கு பிரதான  காரணம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் சூட்சமமான முறையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றியுள்ளார். ஆகவே அதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்